Tuesday, March 3, 2020

THEEVINAI SEIYATHE MAA SOTHANAIYIL

தீவினை செய்யாதே மா சோதனையில் 
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் 
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் 
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
ஆற்றித் தேற்றியே காப்பார் 
நித்தம் உதவி செய்வார் 
மீட்பர் பலனை ஈவார் 
ஜெயம் தந்திடுவார்
வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் 
சேராமலே நீங்கி நல்வழியிலும் 
நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் 
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்
மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான் 
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான் 
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் 
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

No comments: