Tuesday, March 3, 2020

SUMAI SUMANTHU SORNTHIRUPPORAE

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே 
வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார் 
இளைப்பாற்றி கொடுக்கின்றார் 
இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் – 2 
இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்
வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் – 2 
வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன்

துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் – 2 
அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்
வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே 
வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன்

No comments: