Wednesday, October 30, 2019

UM KIRUBAIYINAALE NIRAINTHU LYRICS

உம் கிருபையினாலே நிறைத்து
உம் வசனத்தினாலே என்னை நிறைத்து
நடத்திடுமே இயேசுவே (4)

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் என்றுமே

1) தெரிந்தெடுத்தீர் உம் பிள்ளையாக
என்னை அழைத்தீர் உம் சேவைக்காக - (2)
உம் வழிநடத்தும் சித்தம் போல
என்னை நடத்தும் உம் விருப்பம் போல - உம்மை

2) அபிஷேகியும் உம் ஆவியினாலே
அலங்கரியும் உம் வரங்களினாலே - (2)
உம் வழிநடத்தும் சித்தம் போல
என்னை நடத்தும் உம் விருப்பம் போல - உம்மை

3) உருவாக்கிடும் உம் கரங்களாலே
உருமாற்றிடும் உம் வார்த்தையாலே
உம் வழிநடத்தும் சித்தம் போல
என்னை நடத்தும் உம் விருப்பம் போல - உம்மை - உம் கிருபை

No comments: