Wednesday, October 30, 2019

KATTA PATTA MANITHARELLAM

கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
தேவா… தேவா…

1. எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே

2. அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும்

3. பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும்

4. இமயம் முதல் குமரி வரை
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

5. உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்

6. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

No comments: