Friday, January 25, 2019

YELLAME NEER THANDHATHU LYRICS

எல்லாமே நீர் தந்தது – (2)
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது - (2)

வாழும் பூமி 
உறங்கும் இல்லம்
உண்ணும் உணவு 
கல்வி செல்வம்
கர்த்தவே நீர் தந்தது உம்
காருணியத்தால் வந்தது - (2)

உண்மை அன்பு 
உணர்வுள்ள இதயம்
உம்மை நோக்கி பார்க்கும் 
உள்ளான எண்ணம்
உன்னதரே நீர் தந்தது
உம் அன்பால் தான் வந்தது – (2)

விண்ணை துறந்து 
மண்ணில் வந்து
தன்னை கொடுத்து 
என்னை மீட்டு
இரட்சிப்பு நீர் தந்தது
உம் இரட்சண்யத்தால் வந்தது – (2)

No comments: