Tuesday, October 29, 2019

THOTHIRAM KIRUBAI KOOR IYYA

தோத்திரம்! கிருபை கூர், ஐயா! 
விழி பார் ஐயா, விழி பார், ஐயா!

1.பாத்திரம் இலா எனை நேத்திரம் 
என உச்சிதமாய்க் காத்து வந்திடும்,
எனது கர்த்தாதி கர்த்தனே

2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் 
யாவுமே என்றனை விட்டகலவே 
இரங்கிய தேவனே!

3.மனதிலும் வாக்கிலும் 
மட்டில்லாத பாவி நான்; 
எனது தகற்றி ஆளும், 
ஏகாம்பர நாதனே!

4.போதனே, நீதனே, புனித சத்ய 
வேதனே, கீதனே, தாசர்
துதி கேளும், யேசு நாதனே!

No comments: