Tuesday, October 29, 2019

KARTHTHAR PERIYAVAR PUKAZHAPPATATHTHAKKAVAR

கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்
அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாது
செல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம்

1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
இரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ

2. தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளை
கருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள்

3. கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையை
அறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள்

4. கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமே
பாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம்

No comments: