Tuesday, October 29, 2019

KARTHAR PERIYAVAR AVAR NAMATHU

கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலே
தமது பரிசுத்த பர்வதத்திலே
மிகத் துதிக்கப்படத் தக்கவர்

வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
வடிப்பமான ஸ்தானமே
சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
அது மகா ராஜாவின் நகரம்

அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்
அடைக்கலமாக அறியப்பட்டார்
இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து
அதை கண்டு விரைந்தோடினர்

தேவனே உமது ஆலயம் நடுவே
உம் கிருபையை சிந்திக்கிறோம்
பூமியின் கடையாந்தர பரியந்தமும்
உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே

இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
நித்திய மகிமையில் சேர்த்திடுவார்

No comments: