Tuesday, October 29, 2019

NANDRI SOLLAMAL IRUKKAVE

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று
சொல்லி நான் துதிப்பேன்
நாள் தோறும் போற்றுவேன்

எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில்
செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து
நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன்

மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும்
போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா
மீண்டும் ஜீவனை கொடுத்து
நீர் என்னை வாழ வைத்தீர் ஐயா

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
அளவில்லாத அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்

No comments: