இயேசுவை அரிய உலகரட்சகரே
திரு இருதய நாதரே
தினமும் நீர் எங்கள் ஸ்நேகமாய் இருப்பீர்
தேவதயாநிதியே.....
திரு இருதய நாதரே
தினமும் நீர் எங்கள் ஸ்நேகமாய் இருப்பீர்
தேவதயாநிதியே.....
மனிதரை மோட்ச கதியிலே சேர்க்க
மனுமகனாய் பிறந்தீர்
மகிமை பிரதாப கடவுள் ஆனாலும்
மா பழிமேற் சமந்தீர்
மனுமகனாய் பிறந்தீர்
மகிமை பிரதாப கடவுள் ஆனாலும்
மா பழிமேற் சமந்தீர்
கள்ளனைப் போல கசடர்கள் உம்மை
கடுஞ்சிலுவையில் அறைந்தார்
கருணையார் உந்தன் இருதய அன்பின்
கரை எவர் கண்டறிவார்....
கடுஞ்சிலுவையில் அறைந்தார்
கருணையார் உந்தன் இருதய அன்பின்
கரை எவர் கண்டறிவார்....
No comments:
Post a Comment