தேவா எந்தன் நாவில் ஆடும் பாடலாக வா
தேவா உந்தன் வான் புகழை பாட வரம்தா
தேவா உந்தன் வான் புகழை பாட வரம்தா
உன் அருள் மேன்மையால் பூமி எங்கும் புன்னகை
உன் புகழ் பாடவே பொங்கி எழும்வல்லமை
மனமார வாழ்த்த எழும் இறையரசின் வைகறை
உன் புகழ் பாடவே பொங்கி எழும்வல்லமை
மனமார வாழ்த்த எழும் இறையரசின் வைகறை
நான் எந்தன் வேலியாக என் நலம் கொண்டேன்
நீ பூமி எங்கும் வாழும் தென்றலாகின்றாய் -2
உன் ஒளிக்காண காண உள்ளம் மலர வேண்டுமே
உன் வழிப்போக போக உறவு பெருக வேண்டுமே
இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே
நீ பூமி எங்கும் வாழும் தென்றலாகின்றாய் -2
உன் ஒளிக்காண காண உள்ளம் மலர வேண்டுமே
உன் வழிப்போக போக உறவு பெருக வேண்டுமே
இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே
நான் சிறு கணம் எரியும் ஒளித்துகளானேன்
நீ அதை ஏற்றி வைத்த ஒளிக்கடலானாய் -2
உன் பணி செய்வதிலே எந்தன் ஆசை தீரவே
தன் தலை தியாகமேற்கும் தீபவாழ்வை போலவே
இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே.
நீ அதை ஏற்றி வைத்த ஒளிக்கடலானாய் -2
உன் பணி செய்வதிலே எந்தன் ஆசை தீரவே
தன் தலை தியாகமேற்கும் தீபவாழ்வை போலவே
இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே.
1 comment:
Adeyeppa super typing
Post a Comment