Thursday, October 4, 2018

VAZHIKAATUM YEN DEIVAME LYRICS

வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே
நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி
எனைத் தாங்கும் என் தெய்வமே
என் நிழலாக எழும் தெய்வமே - வழிகாட்டும்
எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கின்றேன்
என்பாத நிழல் நாடும் மனம் கேட்கின்றேன்
நீரின்றியே மண்ணில் வளமில்லையே
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
எனைத் தாங்கும் என் தெய்வமே
என் உயிராக எழும் தெய்வமே
நிலவெங்கும் ஒளிந்தாலும் விழிமூடி பயனேது
துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகையேது
பலனாக கை மீது வா இங்கு
புலனாகும் இறையாக வா - வழிகாட்டும்
என் பாதை முடிவாகும் உன் தாளிலே
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
உன் பார்வைகள் என் வழியாகுமோ
இருள் நீக்கும் விளக்காகவே நான்
சுடர் வீச எனை ஏற்ற வா
ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே
விண் வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பயன் தானே
நிறைவாழ்வின் விதையாகவே எங்கள்
நில வாழ்வு பயன் காண வா வழிகாட்டும்

3 comments:

Unknown said...

Please send a English lyrics

நியாண்டர்தால் said...

வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்குச் சிறப்பாக உள்ளது.

Unknown said...

✝️✝️🛐🛐🛐🛐🛐🛐😭😭😭