Sunday, July 26, 2015

ANAITHAYUM SEITHU MUDIKKUM AATRAL ULLAVARE

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே

 நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா (யோபு 42:2)
 
1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
    எனக்கென முன்குறித்த எதையுமே
    எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் (யோபு 23:13,14)
    உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்
 
2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்கு
    காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
    நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் (யோபு 7:17)
 
3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்
    நான் போகும் பாதைகளை அறிந்தவரே (யோபு 23:20,12)
    உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 
 
4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே (யோபு 9:10)
    காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னை
   அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே
 
5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
    இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
    என் கண்கள் தானே அந்நாளில் காணுமே (யோபு 19:25)
 
    எப்போது வருவீரையா
    என் உள்ளம் ஏங்குதையா

No comments: