Sunday, July 26, 2015

PADUGAL NEER PATTA POTHU LYRICS

கெட்டுப் போனோம் பாவியானோம்
கிருபை செய் நாதனே
மட்டில்லாக் கருணை என்மேல்
வைத்திரங்கும் இயேசுவே

பாடுகள் நீர் பட்ட போது
பாய்ந்து ஓடிய இரத்தம்
கோடி பாவம் தீர்த்து மோட்சம்
கொள்ளுவிக்க வல்லதே -கெட்டுப் போனோம்

துஷ்ட யூதர் தூணினோடு
தூய கைகள் கட்டியே
கஷ்டமாய் அடித்தபோது
காய்ந்த செந்நீர் எந்துணை -கெட்டுப் போனோம்

சென்னிமேல் கொடிய யூதர்
சேர்த்து வைத்த முள்முடி
தன்னால் வடிந்த இரத்தத்தால்
சர்வ பாவம் நீங்குமே -கெட்டுப் போனோம்

No comments: