மனிதனே நீ மண்ணாக
இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே
பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்
மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ
இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்
No comments:
Post a Comment