துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே | ||
1.துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே துத்தியம் செய்வோம் – உமை மா அரசே தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே. 2.சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச் சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே, சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத் தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே. 3.நித்தியபிதாவின் மகிமையில் – நீரே, நிமலாவியினோ – டாளுகிறீரே, நிதமேகார்ச்சனையே – உன்னத நேயருக் கர்ச்சனையே – ஆமேன் |
No comments:
Post a Comment