Saturday, September 5, 2015

IYAIAH NAAN VANTHEN DEVA


ஜயையா, நான் வந்தேன்
  ஜயையா, நான் வந்தேன்; - தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்.

1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர், - தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
- ஜயையா

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;
தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
- ஜயையா

3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
எத்தனை எத்தனையோ! - இவை
திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
- ஜயையா

4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்
தென்னை அரவணையும்; - மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்
- ஜயையா

No comments: