ஜயையா, நான் வந்தேன் | ||
ஜயையா, நான் வந்தேன்; - தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். 1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர், - தயை செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா 2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்; தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா 3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம் எத்தனை எத்தனையோ! - இவை திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா 4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித் தென்னை அரவணையும்; - மனம் தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்; தேவாட்டுக்குட்டி, வந்தேன் - ஜயையா |
lyrics
Saturday, September 5, 2015
IYAIAH NAAN VANTHEN DEVA
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment