Saturday, September 5, 2015

ELUNTHAR IRAIVAN JEYAME JEYAMANAVE

எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

சரணங்கள்

1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் - கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க - இப்
பூவின்மீது சபை செழிக்க --- எழுந்தார்

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க - உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் - தேவ
பக்தர் யாவரும் களிக்க --- எழுந்தார்

3. விழுந்தவரைக் கரையேற்றப் - பாவத்
தெழுந்து மனுக்குலத்தை மாற்ற - விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற --- எழுந்தார்

4. கருதிய காரியம் வாய்க்கத் - தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க - நம்
இரு திறத்தாரையும் சேர்க்க --- எழுந்தார்

No comments: