Saturday, September 5, 2015

ENTHAN JEEVAN YESUVE

1. என்தன் ஜீவன், இயேசுவே,
சொந்தமாக ஆளுமே;
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.

2. என்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; என்தன் கால்
சேவை செய்ய விரையும்,
அழகாக விளங்கும்.

3. என்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்.

4. என்தன் ஆஸ்தி, தேவரீர்,
முற்றும் அங்கிகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்.

5. என்தன் சித்தம், இயேசுவே,
ஒப்புவித்துவிட்டேனே;
என்தன் நெஞ்சில் தங்குவீர்,
அதை நித்தம் ஆளுவீர்.

6. திருப் பாதம் பற்றினேன்;
என்தன் நேசம் ஊற்றினேன்;
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.

No comments: