Saturday, September 5, 2015

ENTHAN AATHMA NESARE

1. என்தன் ஆத்ம நேசரே,
வெள்ளம் போன்ற துன்பத்தில்,
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்,
தஞ்சம் தந்து, இயேசுவே,
திவ்விய மாஅர்பில் காருமேன்;
அப்பால் கரையேற்றிய
மோட்ச வீட்டில் சேருமேன்.

2. வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்;
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்;
நீரே என்தன் நம்பிக்கை,
நீர் சகாயம் செய்குவீர்;
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்.

3. குறை யாவும் நீக்கிட,
நாதா, நீர் சம்பூரணர்;
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்;
நான் அசுத்த பாவிதான்,
நீரோ தூயர் தூயரே;
நான் அநீதி கேடுள்ளான்,
நீர் நிறைந்த நித்தியரே.

4. பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள் பாயச் செய்குவீர்;
ஜீவ ஊற்றாம் இயேசுவே,
என்தன் தாகம் தீருமேன்,
ஸ்வாமீ, என்றும் என்னிலே
நீர் சுரந்து ஊற்றுமேன்

No comments: