Monday, September 14, 2015

AATHUMAAKKAL MEIPPARE MANTHAIYAI PATCHIKKAVUM

1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச்சேரும் நேரமும்,
நாசமோசம் இன்றியே
காரும், நல்ல மேய்ப்பரே.

2. பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவோன்;
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்;
வாசல், காவல் ஆன நீர்
மந்தைமுன் நின்றருள்வீர்.

3. கெட்டுப்போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்,
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்;
எங்கள் ஐயம் யாவிலும்,
கர்த்தரே, நடத்திடும்.

4. புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்.AATHU

No comments: