Monday, September 14, 2015

AAR IVAR AARARO INTHA AVANIYOR MAATHIDAME

ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?

சரணங்கள்

1. பாருருவாகுமுன்னே - இருந்த - பரப் பொருள் தானிவரோ ?
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ ? --- ஆர்

2. மேசியா இவர்தானோ ? - நம்மை - மேய்த்திடும் நரர்கோனோ ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? --- ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ ? - நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? --- ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ ? - நம்மைப் - பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ ? --- ஆர்

5. ஜீவனின் அப்பமோதான் ? - தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ ? --- ஆர்

No comments: