Monday, September 14, 2015

AATHUMA KARTHARAI THUTHIKKINDRATHE

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ!

அனுபல்லவி

நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே - இதோ! --- ஆத்துமா

சரணங்கள்

1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
முடிவில்லா மகிமை செய்தாரே , பல
முடியவர் பரிசுத்தர் என்பாரே - இதோ! --- ஆத்துமா

2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் - நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் - தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் - இதோ! --- ஆத்துமா

3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் - அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
நட்புடன் நினைவொடு நல்லிசரேல் - அவன்
நலம் பெற ஆதரித் தார்மறவேல் - இதோ! --- ஆத்துமா

No comments: