Monday, September 14, 2015

AA AMBARA UMBARAMUM PUGALNTHIRU

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

அனுபல்லவி

ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார்

சரணங்கள்

1. அன்பான பரனே! - அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சித - ரட்சகனாகிய
உச்சிதவரனே! --- ஆ! அம்பர

2. ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, - அன்று
அல்லிராவினில் - தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். --- ஆ! அம்பர

3. ஞானியர் தேட , - வானவர் பாட , -மிக
நன்னய , உன்னத - பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். --- ஆ! அம்பர

4. கோனவர் நாட , - தானவா கொண்டாட - என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
கோத்திரன் பிறந்தார். --- ஆ! அம்பர

5. விண்ணுடு தோண , - மன்னவர் பேண , - ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். --- ஆ! அம்பர

No comments: