Monday, September 14, 2015

AANDAVA PRASANNAMAGI JEEVAN OOTHI

1. ஆண்டவா பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;
ஆசை காட்டும் தாசர்மீதில்
ஆசீர்வாதம் ஊற்றிடும்.

      அருள்மாரி எங்கள் பேரில்
      வருஷிக்கப் பண்ணுவீர்.
      ஆசையோடு நிற்கிறோமே,
      ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

2. தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடே கூடினோம்;
உந்தன் திவ்விய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்.

3. ஆண்டவா , மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்;
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்.

4. தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே! கடாட்சியும்;
பெந்தே கொஸ்தின் திவ்விய ஈவை
தந்து ஆசீர்வதியும்.

No comments: