Monday, September 14, 2015

AANANTHAME JEYA JEYA

ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

அனுபல்லவி

ஞானரட்சகர் நாதர் நமை -இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் --- புகழ்

சரணங்கள்

1. சங்கு கனம் , வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம் ,
எங்கள் ரட்சகரேசு நமை -வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் --- புகழ்

2. முந்து வருடமதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல ,
தந்து நமக்குயிருடையுணவும் - வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் --- புகழ்

3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் ,
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத் ,
தரைதனில் குறைதணித் தாற்றியதால் --- புகழ்

No comments: