உம்மையன்றி உலகினில் எவருமில்லை
உம் துணை இன்றி வாழவேறு விருப்பமில்லை – என்
உடலும் உயிரும் நீர்தானய்யா
உம்மைப் பிரிந்தால் உலகில் வாழ்வேதய்யா
நீரே என் கண்கண்ட தெய்வம்
நிதம் எனக்கு வழிகாட்டும் தீபம்
பாதை மாறிய ஆட்டைப் போல் நானும்
பாரினில் ஓடினேன் ஒரு நாளிலே
நல்ல மேய்ப்பன் என் இயேசு வந்தார்
நான் செல்லும் பாதையில் ஒளியாய் நின்றார்
வாழ எனக்கு வழி காட்டீனீரே
உம்மைப் பாடிடும் வரம் தந்தீரே
உமக்காய் வாழ்ந்திட பெலன் தந்தீரே
தாழ்வில் இருந்தேன் தயவாக நினைத்தீர்
தரத்திரம் என்னை விட்டு நீங்கச் செய்தீர்
வாழ்வில் என்னை உயரத்தில் வைத்தீர்
வறுமையின் வேதனையை ஓடச் செய்தீர்
உம்மைப் பாடும் ஊழியம் செய்தேன்
ஒன்றுக்கும் குறைவில்லை என் வாழ்விலே
இயேசுவே நீரிருக்க கவலையில்லை
– உம்மையன்றி உலகினில் எவருமில்லை
சாட்டை இல்லா பம்பரம் போல தரையினில் நானும் கிடந்தேனய்யா
நூலறுத்த பட்டத்தைப் போல
இருளும் மேகத்தில் காணாமல் மறைந்தேனய்யா
உனக்கு ஒருவர் இருக்கின்றார் என்று
எனக்கு ஆறுதல் சொன்னீரய்யா
இருளும் புயலும் வந்தாலும் வரட்டும்
எனது இதயம் கலங்காதய்யா
No comments:
Post a Comment