Tuesday, April 15, 2025

Thirappil Um Mugam திறப்பில் உம்முகம் நிற்கவும்

 திறப்பில் உம்முகம் நிற்கவும்

சுவரை அடைக்க நான் சம்மதம்
அழைக்கும் எஜமானர் சந்நிதி
அடிபணிந்தேன் நான் அர்ப்பணம்

ஜெபமே ஜெயம் ஜெபமே
ஜெயம் அல்லேலூயா

ஒலிவமலையில் கேட்ட ஓலம்
இதயம் நொறுங்கும் ஆத்மதாகம்
இயேசுவை மாதிரியாக்கிடும்
ஜெபத்தை அனுபவமாக்கிடும்
ஜெபவரம் நீர் தந்திடும்

என் சொந்த ஜனத்தின் பாவத்தை
நெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும்
தலைவன் மோசே நெகேமியா
தானியேல் போல பரிந்துரைக்கும்
விசால உள்ளம் தந்திடும்

எப்போதும் கேட்கும் அப்பா பிதாவே
இப்போதென் வேண்டுதல் கேட்டருளும்
சுயலாப விண்ணப்பம் மறையவும்
பொதுநல மன்றாட்டில் வேர் ஊன்றவும்
உயர்ந்த மனதைத் தந்திடும்

No comments: