Tuesday, April 15, 2025

Um Vazhigalai Arinthavan உம் வழிகளை அறிந்தவன் யார்

 உம் வழிகளை அறிந்தவன் யார்

உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்

வானங்கள் உயர்ந்தது போல்
உம் வழிகளும் உயர்ந்ததுவே
நல்லோசனைகள் ஆலோசனைகள்
சொல்வதில் பெரியவரே

மானிட வழிகளெல்லாம்
உம் வழிகள் இல்லை என்றீர்
என் யோசனைகள் உம் யோசனைகள்
எந்நாளும் வெவ்வேறென்றீர்

உந்தன் நல் வழிகள் எல்லாம்
ஆராய்ந்து முடியாதைய்யா
உந்தன் செயல்கள் மேலானவைகள்
எண்ணிட முடியாதைய்யா

No comments: