ஒரு தந்தையை போல
என்னை தோளில் சுமந்தவர்
ஒரு தாயினும் மேலாய்
என்னில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா
பெத்தலையில் பிறந்தவராம்
சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை மன்னிக்க வந்தவராம்
அவர் யார் யார் யார் தெரியுமா
உண்மையாக உன்னில்
அன்பு வைத்தவர் அவரே
உலக தோற்றம் முதல்
அறிஞ்சு கொண்டவர் அவரே
உனக்காக பாடுகளை
ஏற்றுக்கொண்டாரே
உன்னை மீட்க
தன் உயிரை தந்து விட்டாரே
அவர் தான் (3) இயேசு
மரித்து விட்டார் இயேசு
என்று கவலை படாதே
மீண்டும் உயிர்த்து விட்டார்
என்ற தொனி மறந்து விட்டாரே
நீவணங்கும் தெய்வம் கல்லும்
மண்ணும் அள்ளியே
நீ அழைத்தால் ஓடி வந்து
பேசும் தெய்வம்
அவர் தான் (3) இயேசு
No comments:
Post a Comment