Sunday, October 2, 2022

YAARUMILLAI ENDRU NAAN ALUDHA TAMIL LYRICS

யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் - 2
- யாருமில்லை என்று

வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே - 2
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே - 4
- இயேசுதான் என்

எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம் - 2
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே - 4
- இயேசுதான் என்

வாலிப பாதையிலே
நான் விழுந்த வேளையிலே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே - 4
- இயேசுதான் என்

No comments: