Wednesday, September 14, 2022

Ootru Thannerae Enthan Theva Aaviyae

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கி வா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தாவே 
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 


கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்  
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே --ஊற்றுத் தண்ணீரே


ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே 
கனிதந்திட நான் செழித்தோங்கிட 
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட --ஊற்றுத் தண்ணீரே


இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபை தனிலே
எழும்பிட இந்த வேளை இறங்கிடுமே
ஆத்மா பலமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே --ஊற்றுத் தண்ணீரே

No comments: