Wednesday, September 14, 2022

Kanikkai Thanthom Kanivai Yerpai

காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்
காலத்தைக் கடந்தவா இறைவா
எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா  --2

கண்ணீரிலும் செந்நீரிலும்
மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா (2) --2
காயமும் குருதியும் நிதம் காணும்  --2
எம் உறவுகளைத் தருகின்றோம்
ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

துன்பங்களில் வாடுகின்ற
நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா (2) --2
நியாயமும் நீதியும் இனி நிலவ  --2
எம் நிலைகளையே ஏற்றிடுவாய்
ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

No comments: