காணிக்கை தர நான் வருகின்றேன்
உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன் (2)
என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்
என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2)
என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான்
என்னையே முழுவதும் தருகின்றேன் (2)
சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம்
உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2)
ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை
பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2)
No comments:
Post a Comment