Thursday, February 20, 2020

ULLATHIL EZUPUTHAL THAARUM

உள்ளத்தில் எழுப்புதல் தாரும்
நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி
நம் தேசம் பாழானதே
இயேசு ராஜனை நாடி சேரும்வரை
நம் வாழ்வும் வீணானதே

தேவா எழுப்புதல் எங்கள் உள்ளத்தில்
நித்தம் தாரும் எம் நேசரே
எங்கள் வாழ்வும் வழியும்
எங்கள் சொல்லும் செயலும்
உம் பாதம் தந்தோம் ஐயா – 2 – தேவா

1. மாயையாம் இப்பூமியில்
மயங்கியே அலைந்தோம் ஐயா – 2
நேசரே உயிர் ஈந்ததால்
நேசமாய் வாழ்வை பெற்றோம் – 2 – தேவா

2. இருளின் பாதைதனில்
வாழ்ந்திடும் மாந்தர்தனை – 2
ஒளியண்டை நடத்திடவே
ஒளியாய் மாற்றும் தேவா – தேவா

3. திறந்த வாசல் இன்றே
நற்செய்தி சொல்வோம் நன்றே – 2
வருகையின் நாள் முன்னமே
விரைந்தே செயல்படுவோம்

No comments: