Thursday, February 20, 2020

MULMUDI SUDIYA AANDAVAR

முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்

கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்

நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே

வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா

கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே

No comments: