Wednesday, February 6, 2019

ENNAI YAARENDRU ENAKKE INDRU LYRICS

என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர் 
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று 
எனக்கே நினைவூட்டினீர்

என்னால் முடியும் என்று நினைத்தேன் - எனக்கு
எல்லாம் தெரியும் என்று நடந்தேன் - ஆனால்
வழியிலே தவறி விழுந்தேன் - நல்ல
வழியையும் தவறி அலைந்தேன் - நான் 
தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன் 

நானாய் நடந்த சில வழிகள் - இன்று 
வீணாய் மனதிற்குள்ளே வலிகள் - எந்தன்
சுயத்தினால் கிடைத்த சிறைகள் - எந்தன் 
அகத்தினுள் படிந்த கறைகள் - இல்லை
நிறைகள் முற்றிலும் குறைகள்

வேண்டாம் இனி எனது விருப்பம் - ஐயா
உந்தன் வழியில் என்னை நடத்தும் - இன்றே
எந்தன் சுயமதனை அகற்றும் - அன்று
எந்தன் ஜீவியமது சிறக்கும் - புத்தி 
பொருத்தும் முற்றிலும் திருத்தும்

No comments: