Wednesday, February 6, 2019

UMMAI NOKKI ODI VARUGINDREN LYRICS

உம்மை நோக்கி ஓடி வருகின்றேன்
உந்தன் நிழலில் தங்கிடுவேன் உன்னதரே
அளவற்ற அன்பினால் என்னை நேசித்து
காருண்யத்தினால் என்னை இழுத்து கொண்டீரே
என்னையே உம்மிடம் தருகிறேன்

என்னை பிடித்துக்கொள்ளும் அணைத்துக்கொள்ளும்
வழிநடத்தும் கூடவே வாரும்

வெகுதூரமாய் போன என்னை தேடி
மறுவாழ்வு தந்தீரே
மறந்தீரே நான் செய்த துரோகங்களை
தந்தீரே இழந்து போன மகிமையை

திருரத்தத்தால் என்னை சுத்திகரித்து
நீதிமானாய் மாற்றினீரே
அப்பா பிதாவே என்று கூப்பிட
உரிமையை எனக்கு தந்தீரே

No comments: