Tuesday, November 5, 2019

YOOTHA RAAJASINGAM UYIRTHTHELUNTHAAR

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் 
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் 

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே — யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே 
துதித்திடவே, பரனைத் துதித்திடவே — யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன — யூத

4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே — யூத

5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் — யூத

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை — யூத

7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் — யூத

No comments: