Tuesday, November 5, 2019

NEELAVAANIL KIRISTHU RAAJAAVAI KAANPAEN

நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்
என் இயேசு வருவார் அங்கு
மேக மீதில் பறந்தே செல்வேன்
மெசியாவோடு என்றும் வாழ்வேன்
எக்காளங்கள் முழங்க 
நானும் கேட்டே மகிழ்வேன்
பக்தர்கள் முன்னே செல்ல
பின்னே நானும் செல்வேன் (2)
சுத்தரோடு செர்ந்து சங்கீதம் பாடி மகிழ்வேன்
சமாதான பிரபுவோடு வாழ்வேன்
பசிதாகம் அங்கில்லை
பயங்கள் ஒன்றும் இல்லை
பரிதவிக்க பிரச்சனைகளோ
பரலோகத்தில் இல்லை (2)
மேசியாவின் முன்பு மரணமும் பாதாளமும் இல்லை
மகிமையில் தேவன் முன் நான் வாழ்வேன்

No comments: