Tuesday, November 5, 2019

AA AMPARA UMPARA MUM PUKALUNTHIRU

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

அனுபல்லவி

ஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ!

சரணங்கள்

1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!

2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்று
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். – ஆ!

3. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிக
நன்னய, உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். – ஆ!

4. கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்று
கோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத
கோத்திரன் பிறந்தார். – ஆ!

5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். – ஆ!

No comments: