Tuesday, November 5, 2019

NALLIRAA NAERAM VENPANI MAAYAM

நல்லிரா நேரம் வெண்பனி மாயம்
வல்லவ தேவன் புல்லணை மீதில்
கல்லும் கரைய கண்கள் நீர் மல்க |
புல்ல்ரை மீட்க பாலகன் ஆனார் | 2

1. மாந்தரை மீட்க மக்களைத் தேற்ற
மாட்டுத் தொழுவம் தேடிப் பிடித்த
வாட்டும் குளிரில் நாட்டுப் புறத்தில் |
பாட்டாளியாக தோன்றிய பாலன் | 2

2. ஆணவம் நீங்க ஆங்காரம் வீழ
ஈனர் செருக்கும் வீழ்ச்சியடைய
வானுயர் தேவன் வைக்கோலின் மீதில்|
வந்து பிறந்தார் ஏழைக் குடிலில் | 2

No comments: