Tuesday, November 26, 2019

THALARNTHU PONE KAIHALAI

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்

உறுதியற்ற உள்ளங்களே திடன்
கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
அநீதிக்குப் பழிவாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூயவழி தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்
கடந்து செல்வதில்லை மீட்கப்பட்டோர்
அதன் வழியாய் நடந்து செல்வார்கள்

ஆண்டவரால் மீட்கப்பட்டோர்
மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

பார்வையற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள் போல
துள்ளிக் குதிப்பார்கள் ஊமையர்கள்
பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள்

No comments: