Tuesday, November 26, 2019

JEBAM SEIDHIDUVOM KANNEER

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் ஷேமத்திற்காய்
ஜெபிப்போம் செயல் படுவோம்
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்
அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்
இடைவிடாமல் எப்பொழுதுமே – ஜெபம்

1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன
ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம் 
விரைந்து செயல்படுவோம் — ஜெபம்

2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?
நம்மில் யார் யார் யாரோ?
திறப்பிலே யார், யார் யாரோ? — ஜெபம்

3. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்
மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்
ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே
கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் — ஜெபம்

4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால் ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போம் (2) — ஜெபம்

No comments: