Tuesday, November 26, 2019

JEEVA APPAME JEEVADHIPADHIYAE

ஜீவ அப்பமே, ஜீவதிபதியே 
ஜீவனின் பெலனே -2
ருசிப்போம், புசிப்போம், மகிழ்வோம்
நீர் நல்லவர், வல்லவரே -2

மன்னாதி மன்னவனே, பரலோக மன்னாவே - 2
மனதின் மகிழ்ச்சியே எந்தன் 
வாழ்வின் புகழ்ச்சியே -2

1. அன்பது இனிமை, பாசமே புதுமை 
பெருகுதே பேரின்பமே ,
பேதயர்க்கு என்றுமே -2
பேருலகில் யாவுமே, வீணாக தோன்றிடுதே 
பரலோகத்தின் பேரின்பத்தை, ருசிப்பெனே என்றுமே -2 

2. தூதரின் உணவை உம் ஜனத்துக்கு கொடுத்தீர் 
கன்மலை நீரூற்றினால், தாகத்தை தீர்த்துவிட்டீர் -2
காடைகளைக் குவித்தீர், ஏராளமாய் கொடுத்தீர்
பாதைஎல்லாம் பாலும், தேனும் பாய்ந்திட செய்திட்டீரே -2

3. ஜீவனை ஊற்றினீர், ரத்தத்தை சிந்தினீர் 
எனக்குள்ளே வாழ்ந்திடவே, ஒன்றறக் கலந்துவிட்டீர் -2
ஆலயமாக்கினீர், உள்ளத்தில் வாழ்கின்றீர்
வாக்கடங்கா பெருமூச்சோடேபரிந்து பேசுகின்றீர் -2

4.. சீக்கிரம் வாருமே, வாஞ்சைகள் தீருமே
ஜீவனின் ஊற்றண்டையில், ஜீவகனி புசிப்பேன் -2
ஜீவனில் பெருகியே, பூரனமடைந்திடுவேன்
பொன்முகத்தின் சாயலினால் மருரூபமடைவேனே -2 

No comments: