Tuesday, November 26, 2019

KAANIKKAI THARUVAAYAE

காணிக்கை தருவாயே கர்த்தற்குனது
காணிகை தருவாயே
காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால்
பத்தில் ஒரு பங்குதானோ பத்தினில் கட்டுப்
பட்ட யூதருக் கல்லவோ
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ
உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்
உன் மனம் ஆவி பந்தமோ
அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்
தேவ வசனம் பரப்ப அதனுக்கென்று
செல்லும் செலவை நிரப்ப
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே
பயிர் பலன் மூலமாகவும் இன்னும் பலர்க்குப்
பணம் முதலானதாகவும்
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில்

No comments: