Saturday, December 26, 2015

Ennai kandavare ennai kaanbavare

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா

என்னை கண்டவரே
என்னை காண்பவரே
என்னை காத்தவரே
என்னை காப்பவரே

1. பாவீயாய் இருந்த என்னை கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்து கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்து கொண்டீரே

2. கடந்த காலம் எல்லாம் காத்து கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்து கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தீ செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே

3. தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே
மதில்களை தாண்டும்படி தூக்கி விட்டீரே
நெரிந்த நாணலை போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே

No comments: