Saturday, December 26, 2015

KARTHER NALLAVAR THUTHIYUNGAL


1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

மகிழ்ந்து பாடு அல்லேலூயா
புகழ்ந்து பாடு அல்லேலூயா
சேர்ந்து பாடு அல்லேலூயா
போற்றிப் பாடு அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
துதித்துப் பாடு அல்லேலூயா
களித்துப்பாடு அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா (18)

2. வானங்களை விரித்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பூமியைப் படைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சந்திரனைப் படைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

3. செங்கடலைப் பிளந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அரசர்களை அழித்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சேனைகளைக் கவிழ்த்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேசத்தைத் தந்தவரைத் துதியுங்கள்

4. தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

No comments: