Saturday, December 26, 2015

KARTHER EN MEIPERAI IRUKINDRARE


1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

2. ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்

3. மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

4. சத்துருக்கள் முன்பில் எனக்காக
பந்தி யொன்று ஆயத்தம் செய்தார்
என்னை தம் எண்ணையால் அபிஷேகித்து என்
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

No comments: