கல்வாரி சிலுவை நாதா
காரிருள் நீக்கும் தேவா
காரிருள் நீக்கும் தேவா
அனுபல்லவி
பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) --- கல்வாரி
புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) --- கல்வாரி
சரணங்கள்
1. மன்னுயிர் மீட்கும் அன்பால்தன் உயிர் மாய்த்தாய் அன்பே
மன்பதை மாந்தர் முன்னால்
தரணியை இழுத்தாய் நின்பால் (2) --- கல்வாரி
2. தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்
வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) --- கல்வாரி
No comments:
Post a Comment