Saturday, September 19, 2015

KALVAARI SILUVAI NAADHA

கல்வாரி சிலுவை நாதா
காரிருள் நீக்கும் தேவா

அனுபல்லவி

பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) --- கல்வாரி

சரணங்கள்

1. மன்னுயிர் மீட்கும் அன்பால்
தன் உயிர் மாய்த்தாய் அன்பே
மன்பதை மாந்தர் முன்னால்
தரணியை இழுத்தாய் நின்பால் (2) --- கல்வாரி

2. தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்
வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) --- கல்வாரி

No comments: